ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இந்தியாவுடன் இணைத்தது குறித்து கேள்வி எழுப்பி சலசலப்பை உண்டாக்கிய சமூக ஆர்வலர் அருந்ததி ராய், அந்த மாநிலம் ஒரு போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கவில்லை என்று கூறியுள்ளார்.
பொது சமூகத்திற்கான கூட்டமைப்பு என்ற அமைப்பு ஏற்பாடு செய்து ஸ்ரீநகரில் நடைபெற்ற "காஷ்மீர் : சுதந்திராமா அல்லது அடிமையா?" என்ற கருத்தரங்கில் கலந்து கொண்டு அருந்ததி ராய் பேசினார்.
காஷ்மீர் ஒரு போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கவில்லை. இது ஒரு வரலாற்று உண்மை. இந்திய அரசு கூட இந்த உண்மையை ஒப்புக் கொண்டுள்ளது என்று ராய் கூறினார்.
பிரிட்டிஷாரிடமிருந்து இந்தியா விடுதலை பெற்ற உடனே, இந்தியா காலனியாதிக்க சக்தியாக மாறியதாகவும் அருந்ததி ராய் குற்றம் சாட்டினார்.
http://www.inneram.com/2010102411417/kashmir-has-never-been-an-integral-part-of-india-roy
Showing posts with label காஷ்மீர். Show all posts
Showing posts with label காஷ்மீர். Show all posts
Monday, October 25, 2010
Tuesday, September 28, 2010
100 நாட்களில் 108 இளைஞர்களை இழந்து நிற்கிறோம்:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி இன்று கோவையில் தனியார் பள்ளியின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், ‘’காஷ்மீர் பிரச்சனை பற்றி ஜூன் மாதமே மத்திய அரசுக்கு எடுத்துச்சொன்னோம். ஆனால் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தியது.அதனால்தான் கடந்த 100 நாட்களில் 108 இளைஞர்களை இழந்து நிற்கிறோம்.
அவர் மேலும், ‘’காமன்வெல்த்- அன் காமன்வெல்த்’’ என்று கமெண்ட் அடித்தார். தொடர்ந்து, ‘’காமன்வெல்த்தை பொறுத்தவரை இந்தியாவின் மானம் பறிபோகும் என்பதால்தான் கொஞ்சம் அமைதியாக இருக்கிறோம்.
அதற்காக இதில் நடக்கும் ஊழலையும், லஞ்சத்தையும் தட்டிக்கேட்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது.
அயோத்தியில் 24ம் தேதி கூறப்படவேண்டிய தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டது வேதனை. உடனடியாக தீர்ப்பு வழங்க வேண்டும். தீர்ப்புக்கு பின்னர் எவரும் எந்த வித தீய வழிகளில் ஈடுபடாமல் அமைதி காக்க வேண்டும்’’ என்று தெரிவித்தார்
Monday, September 20, 2010
ஜம்மு-காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வுகாண ஆயுதப்படைகள் சட்டத்தை திரும்ப பெற வேண்டும்; அனைத்து கட்சி கூட்டத்தில் திருமாவளவன் வலியுறுத்தல்
ஜம்மு-காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் புதுடெல்லியில் நடைபெற்ற அனைத்து கட்சிக் கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகளின் தலைவர் தொல். திருமாவளவன் கலந்த கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த மக்கள் நமது மக்களே என்று கூறினார். இது மிகவும் பாராட்டுக்குரியதாகும். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மக்களிடையே உள்ள உண்மை நிலவரம் என்ன என்பதைச் சுட்டிக்காட்ட நான் விரும்புகிறேன். அம்மாநிலத்தைச் சேர்ந்த மக்களின் மனநிலை என்ன என்பதை இந்திய அரசு அறிந்துள்ளதா? இல்லையா? என்று எனக்குத் தெரியவில்லை.
இந்திய அரசுக்கும் ஜம்மு-காஷ்மீர் குடிமக்களுக்கும் இடையே உள்ள முதன்மையான முரண்பாடு இதுதான் என்று உணர்கிறேன். அம்மக்களின் மனநிலை எவ்வாறு உள்ளது எனும் கோணத்திலிருந்து இப்பிரச்சினையை இந்திய அரசு அணுக வேண்டும். அவ்வாறு இதனை அணுகா விட்டால் இப்பிரச்சினைக்கு நிலையான தொரு தீர்வை நம்மால் காணவே முடியாது
Subscribe to:
Posts (Atom)