Showing posts with label லாரி. Show all posts
Showing posts with label லாரி. Show all posts

Wednesday, September 29, 2010

அயோத்தி தீர்ப்பையொட்டி லாரிகள் நிறுத்தம்

அயோத்தி தீர்ப்பையொட்டி நாளை தமிழகம் முழுவதும் லாரிகள் இயக்காது என, லாரிகள் உரிமையாளர் சங்கத் தலைவர் நல்லதம்பி தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
அயோத்தி தீர்ப்பின் எதிரொலியாக தமிழகத்தில் நாளை லாரிகள் இயங்காது. பாதுகாப்பு கருதியே தமிழகம் முழுவதும் ஒன்றரை லட்சம் லாரிகள் இயக்கப்படாது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

தமிழகத்தில் நாளை பகல் 12 மணி முகல் மறுநாள் காலை 6 மணி வரை லாரிகள் இயக்கப்படாது. சூழ்நிலையைப் பொறுத்து நாளை மறுநாள் லாரிகள் இயக்கப்படுவது பற்றி முடிவெடுக்கப்படும் என்றார்