Showing posts with label பைத்துல்மால். Show all posts
Showing posts with label பைத்துல்மால். Show all posts

Sunday, May 30, 2010

அதிரை எக்ஸ்ப்ரஸ் வாசகர்களுக்கு முனைவர்.அப்துல்லாஹ் பதில்கள்


அதிரை பைத்துல்மால் சார்பில் நடைபெற்று வரும் 12 ஆவது திருக்குர்ஆன் மாநாட்டில் நாடறிந்த பேச்சாளரும் உளவியல் வல்லுனருமான முனைவர். அப்துல்லாஹ் (முன்னாள் பெரியார்தாசன்) அவர்கள் மூன்றாம் நாள் அமர்வின் சிறப்பு விருந்தினராக உரையாற்ற உள்ளார்கள்.

அதிரை எக்ஸ்ப்ரஸில் மாநாட்டு நிகழ்ச்சிகளை அதிரைமீடியா.காம் உதவியுடன் நேரடி ஒளிபரப்புச் செய்து வருகிறோம். மேலும் உலகமுழுவதிலும் பரவியுள்ள அதிரைவாசிகள் பேரா.அப்துல்லாஹ் அவர்களிடம் கல்வி, உளவியல், குடும்பவியல் மற்றும் பயனுள்ள பொதுவான கேள்விகளைக் கேட்கவும், அதற்கு முனைவர் அப்துல்லாஹ் அவர்களின் பதிலைப் பெற்றுத்தரவும் மாநாட்டுக் குழுவினருடன் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.

குறுகிய கால அவகாசமே இருப்பதால் இத்தகவலை தமிழ் முஸ்லிம்கள் குழுமங்களிலும் அதிரைவாசிகளின் வலைப்பூக்களிலும் பரவச் செய்து நமதூர் வாசிகள் மிகச்சிறந்த உளவியல் வல்லுனரும் தர்க்கவாதியுமான முனைவர் அப்துல்லாஹ் அவர்களிடம் கேள்வி கேட்கும் வாய்ப்பைப் பெறுமாறு அதிரை எக்ஸ்ப்ரஸ் வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

கேள்விகளை தங்கள் முகவரியுடன் adiraixpress@gmail.com என்ற முகவரிக்கோ அல்லது பின்னூட்டமாகவோ கேட்கலாம். இந்த அரிய வாய்ப்பை நமதூர்வாசிகள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறோம்.

thanks adirai xpress

பைத்தூல் மால் திருக்குர் ஆன் மாநாடு நேரடி ஒளிபரப்பு

நமதூர் அதிரை பைத்துல்மால் நடத்தும் 12 ஆவது திருக்குர்ஆன் மாநாடு நேரடி ஒளிபரப்பு

இங்கு கானலாம்

http://www.adiraimedia.com

Thursday, May 27, 2010

அன்பார்ந்த சகோதரர்களே .............

அதிரை பைத்துல்மால் வருடந்தோறும் நடத்தும் திருக்குர்ஆன் மாநாட்டில் மூன்றாம் நாள் இன்ஷா அல்லாஹ்
சிறப்பு விருந்தினர்
 

முனைவர் ஜனாப் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) 


"இறைவனின் அருட்கொடை இனிய இஸ்லாம்"


என்ற தலைப்பில்  பேசுகிறார்கள்.
இடம் முகைதீன் அப்பா பள்ளி வளாகம்,செக்கடி மேடு,அதிராம்பட்டினம்.
நாள் 30-05-2010 (ஞாயிற்றுக் கிழமை)