Showing posts with label அலகாபாத். Show all posts
Showing posts with label அலகாபாத். Show all posts

Sunday, October 17, 2010

பாபரி பள்ளிவாசலை அதே இடத்தில் கட்டுவது மட்டும் தான் ஒரே தீர்வு!-

அயோத்தியில் பாபரி பள்ளிவாசலை தகர்க்கப்பட்ட  இடத்திலேயே மஸ்ஜித் கட்டித்தருவதைத் தவிர வேறு எந்த சமரசத் தீர்வையும் ஏற்க மாட்டோம் என்று டெல்லி ஜும்ஆ மஸ்ஜித் தலைமை இமாம் சையத் அஹமத் புஹாரி தெரிவித்திருக்கிறார். டெல்லி மற்றும் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த நாற்பதுக்கும் மேற்பட்ட மார்க்க அறிஞர்கள் டெல்லியில்  கூடி அலகாபாத் உயர்நீதிமன் றத் தீர்ப்பு குறித்து விரிவாக விவாதித்தனர். 

அலகாபாத் உயர் நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பை முழுதாக நிராகரிப்பதாகவும் மஸ்ஜித் கட்டுவது தொடர்பாக எந்தவித சமரசத் தீர்வையும் ஏற்பதற்கு தாங்கள்  தயாராக இல்லை என்றும் அவர்கள் தீர்மானம் நிறைவேற்றினர்.

“அலகாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்பை நாங்கள் நிராகரிக் கிறோம்; இந்தத் தீர்ப்பு தொடர் பாகத் தன்னுடைய நிலை என்ன என்பதை மத்திய அரசும், காங்கிரஸ் கட்சியும் தெளிவாக விளக்க வேண்டும் என்று எதிர் பார்க்கிறோம்.

இந்த விவகாரம் தொடர்பாகப் பிரதமர் மன்மோகன் சிங்குக்குக் கடிதம் எழுதி அவரைச் சந்திக்க நேரம் ஒதுக்குமாறு கேட்டிருக்கிறோம்.

மஸ்ஜிதிற்கு எதிரான அத்தனை நடவடிக்கைகளுக்கும் காங்கிரஸ் கட்சிதான் நேரடியான காரணம் என்று நாங்கள் கருதுகிறோம். பாபரி பள்ளிவாசல் பிரச்னை தொடங்கியது முதல் அலகாபாத் உயர் நீதிமன்றம் இப்போது அளித்துள்ள தீர்ப்புவரை அனைத் துமே காங்கிரஸ் கட்சியின் நடவடிக்கைகளால் அமைந்தவை தான்” என்றும் அவர் கடுமையாக சாடினார்.

முஸ்லிம்களுக்கு உற்ற நண்பனைப் போல பேசியே ஏமாற்றிக் கொண்டு, வகுப்புவாத சக்திகளுக் குத்தான் காங்கிரஸ் துணைபோய்க் கொண்டிருக்கிறது. 

முஸ்லிம்களில் சிலர் சமரசத் தீர்வு காண்பதாகக் கூறிக்கொண்டு கொல்லைப்புற  வழியாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதை நாங்கள் விரும்பவும் இல்லை, ஆதரிக்கவும் இல்லை. எந்த மாதிரி யான சமரசத் தீர்வை அவர் கள் காணப் போகிறார்கள்? இடிக்கப் பட்ட இடத்திலேயே மஸ்ஜிதை அமைப்பதைத் தவிர வேறு எதையும் முஸ்லிம்களால் ஏற்க முடியாது. இந்த விஷயத்தில் முஸ்லிம் சமூகத்தை ஆதரிக்கும் எவருடைய ஆதரவையும் நாங்கள் வரவேற்கிறோம். வழக்கு தொடர் பாக உச்சநீதி மன்றத்தில் மனுத் தாக்கல் செய்வோம் என்றார்.