Thursday, November 25, 2010

அதிரை பேருந்து நிலையத்தின் அவல நிலை


அதிகமாக வரி செலுத்தும் பேருர்ராட்சி நமது அதிரை பேருர்ராட்சி என்று நாம் பெருமிதம் கொள்கின்றோம்.ஆனால் நமது பேருந்து நிலையத்தின் அவல நிலையை பாரிர். தமிழக அரசிடம் இருந்து கடந்த நான்கு ஆண்டுகளில் 5 கோடியே 76 லட்சம் பெற்று அதிரையின் அணைத்து தேவைகளையும் நிறைவு செய்ததற்காக? பேரூர் மன்ற தலைவர் மற்றும் துணை தலைவர் அவர்களையும் வாழ்த்தி பேனர் வைத்து உள்ளது.
நமது பேருந்து நிலைய சாலையில் எந்த அடிப்படை நடவடிக்கை ஏதும் எடுக்காமல் குண்டும் குழியுமாக உள்ளது.சில ஆண்டுகளுக்கு முன் இதே சாலையில் நாத்து நடவும் போராட்டத்தை கம்யூனிஸ்ட் கட்சி நடத்தியிருந்ததும் இங்கு நினைவு கூறத்தக்கது. 

 அதிரையின் அனைத்துத் தேவைகளையும் நிறைவு செய்துள்ளதாக பெருமைபட்டுக்கொல்லும் நமதூர் பேரூர் நிருவாகம் அந்த சாலையை சீர் அமைத்து தருமா என்பதே அதிரைவாசிகளின் கேள்வியாக உள்ளது.














adiraivoice

No comments:

Post a Comment