Sunday, July 25, 2010

காலணி கலவரம் வழக்கில் அப்பாவிகளை விடுவிக்க வேண்டுகோள்

அஸ்ஸலாமு அலைக்கும் (வராஹ்)

 
கீழ்கண்ட தகவலை அதிரை சம்மந்தப்பட்ட இனைய தளங்களில்  பொது நலம் கருதி வெளியிடவும்" 

 
முன்பு அந்த நாற்பது பேரில் நீங்களும் ஒருவரா? என்ற கட்டுரை "அதிரை எக்ஸ்பிரசில் வந்ததை சகோதர் மு.அ.ஹாலிது மூலம் அறிந்தேன்., இந்த வழக்கில் என்னைத்தான் முதல் குற்றவளியாக பொய்வழக்கில் சேர்த்தனர்., அதில் குற்றவளியாக புனையப்பட்ட அனைத்து அப்பாவி சகோதர்களையும் வழக்கிலிருந்து விடுவிக்க பலசிரமங்களுக்கு இடையில் பாடுபட்டேன் இதற்க்கு இறுதியாக  செக்கடிமேட்டிலுள்ள தியாகி அப்பாஸ் ஹாஜியார் படிப்பகத்தை சேர்ந்த நண்பர்கள் குழுதான் முழு உதவி செய்தனர்., அல்ஹம்டுளில்லாஹ்.
 
அந்த உதவியின் மூலம் என்னுடன் வழக்கிற்கு ஒத்துழைத்த பதிமூன்று நபர்கள் வழக்கிலிருந்து விடுவிக்கப் பட்டனர். மீதமுள்ளவர்களுக்கும்  தகவல் கொடுத்தும் எங்களுக்கு ஒத்துழைக்கவில்லை. பரவாயில்லை. இன்ஷா அல்லாஹ் இனி அவர்களுக்கு வாய்ப்புகள் அருகில் உள்ளது.  

 
இனி அவர்கள் மேற்குறிப்பிட்ட வழக்கிலிருந்து விடுதலை பெற விரும்பினால்., இன்ஷா அல்லாஹ் நான் முழுபொறுப்பையும் ஏற்று வழக்கை முடிவுக்கு கொண்டுவர தயாராக இருக்கின்றேன்.  
 
இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள் என்னுடைய வழக்கறிஞர் திரு நடராஜன் அவர்களே உடனடியாக 9443295916  என்ற எண்ணில் தொடர்புக் கொண்டு வழக்கிற்கு ஒத்துளைத்தால் போதும் அவரிடம் இதைப் பற்றி (வழக்கறிஞர் அவர்களுக்கு) தகவல் விரிவாக கொடுக்கப்பட்டு விட்டது.  

 
தங்களின் அன்புள்ள 
சி. நா. அ. சரபுதீன் சிட்னி  
--www.alaippoo.blogspot.com

Monday, July 19, 2010

பசிக்காக சாப்பாடு

சின்ன வயது ஆண்கள் நிரந்தர கர்ப்பஸ்த்ரீ மாதிரி அலைவதுகண்டு எழுதுகிறேன். வயிறு அதன் சார்ந்த செரிமான செயல்பாடுகளை தெரிய தஞ்சாவூர் பஸ் ஸ்டான்டில் 'இஞ்சிமரப்பா"விற்க்கும் மனிதர் விவரமாக சொல்லிவிடலாம். இருப்பினும் இதை சரியாக புரிந்து கொண்டால் இறைவனின் எத்தனையோ அதிசயங்களில் இதுவும் ஒன்றாக தோன்றும். வாய்க்கு பக்கத்திலேயே கெட்ட உணவு / நல்ல உணவு கண்டுபிடிக்கும் ஸ்கேனர் [வாசம் அறியும் மூக்கு] வைத்த இறைவன் சில விதி முறைகளையும் வைக்காமல் இருந்திருக்க மாட்டான்.
40 வயதுக்குள் 70 வயது "சாப்பாடு கோட்டா" வை முடித்துவிடுபவர்கள் கவனத்திற்க்க;


முதலில் சாப்பாடு பசிக்காக , பிறகு ருசிக்காக என பரிணாம வளர்ச்சி அடைந்து இப்போது ஏற்க்கனவே அதிகம் சாப்பிட்டு ரப்பர் பேண்ட் மாதிரி பெரிதாக்கி வைத்துஇருக்கும் குடலை சாப்பாடு கொண்டு நிரப்புவது என ஆகி விட்டது.
இப்போதெல்லாம் நம் ஊரில் விருந்துக்கு பஞ்சமில்லை. இப்போது உள்ள ட்ரெண்ட் என்னவென்றால் திருமண விருந்தில் வயிறுமுட்ட வெலுத்துக்கட்டுவது பிறகு செறிமானத்துக்கு என பெப்ஸி, கோக் என கார்பனேட்டெட் சமாச்சாரங்ளில் சந்தோசப்படுவது ஒரு விதமான் அறியாமைதான். ஏற்கனவெ உள்ளே போன ஹெவியான சாப்பாட்டுக்கு இன்சுலின் தயாரிக்க சிரமப்படும் பேன்க்ரியாசஸ் " விட்டுருங்க காக்கா" என கையெடுத்து கும்பிடும்போது நீங்கள் இன்னும் அவதிப்படு என கோக்/பெப்ஸியை அனுப்புவது மஹிந்த்ரா ராஜபக்சே தனமானது.
ஏனெனில் ஒரு 35 வயது மனிதனுக்கு தேவை 1462 கலோரி ஒரு நாளைக்கு போதுமானது , ஆனால் விருந்தில் சாப்பிடும் ஆட்டிறைச்சி மட்டும் [ உதாரணமாக 200 கிராம்] 738 கலோரியை தருகிறது. இதெற்க்கெல்லாம் செத்துபோன ஆடு கலோரி மீட்டரை கழுத்தில் கட்டிக்கொண்டு வந்து உங்கள் கனவில் வந்து செய்தி சொல்லும் என எதிர்பார்ப்பது ரொம்ப தப்பு. இனிமேலும் தெரியாமல் அதிகம் சாப்பிட்டால் தேவைக்காரவீட்டு ஆட்களிடம் சொல்லி கலோரியை ஆட்டிறைச்சியில் ப்ரின்ட் செய்ய சொல்லவேண்டியதுதான்.
நம் ஊரில் ஆட்கள் சமீப காலமாக நடப்பதை [ ராஜாமடம் ரோடு] பார்க்கிறேன். பெரும்பாலான ஆட்கள் "கார்டியோ வாக்" செய்வதில் அதிகம் ஆர்வம் காட்டுவதில்லையோ என தெரிகிறது. முதல் பத்து நிமிடம் கொஞ்சம் கொஞ்சமாக வேகம் அதிகரித்து 20 வது நிமிடத்திலிருந்து 35 நிமிடம் வரை முடிந்த்த அளவு வேகம் அதிகறித்து 35 - 45 நிமிடம் வரை மெதுவாக நடந்து பிறகு அமைதியான் இடம் பார்த்து அமர்ந்து அமைதி அடைவது கார்டியோவாக். இதனால் இதயம் பலப்படும், நம் கண்ணுக்குதெரியாமல் அடைபடும் ஆர்ட்டரியில் தெளிவான ரத்த ஓட்டம் தரும்.
சுத்தமில்லாத தண்ணீர் , உணவு மூலம் பரவும் கிருமிகளின் "அதபு" நம் ஊர் போன்ற இடங்களில் அதிகம்.முன்பு எல்லோரும் 'ஒற்றுமையுடன்" கழுவிய குளங்களின் மூலம் அமீபியாசிஸ் பரவி நம் ஊர்க்காரர்களின் பீஸில் தஞ்சாவூர் ஆஸ்பத்திரிகள் வளர்ச்சி அடைந்து விட்டது.
தொடர்ந்து செரிமானகோளாரு இருந்தால் ஒருமுறை ஸ்கோப் செய்து அத்துடன் பயோப்சி செய்து விடுவது நல்லது. இப்போது பெரும்பாலானவர்களின் வயிற்றுப்பிரச்சினைக்கு காரணமான வில்லன் H.Pylori எனும் கிருமிதான். [ இது ரத்த பரிசோதனையிலும் தெரியும்.] இது இருக்கும் இடம் தேடி கொல்வதற்க்கு மருந்து கண்டுபிடித்த டாக்டருக்கு நோபல்பரிசு கிடைத்தது. மருந்து ஒரு வாரம் சாப்பிட்டு ஒருமாதம் கழித்து Breath Test டெஸ்ட் எடுத்தால் வில்லன் உங்கள் வயிற்றில் இருக்கிறாரா இல்லையா என சொல்லி விடும் .அதனால் தான் முன்பெல்லாம் வேப்பெண்ணை / விளக்கெண்ணை தருவார்கள் என சொல்ல வரும் வாசகர்களுக்கு இது கொஞ்சம் திமிர் பிடித்த கிருமி அவ்வளவு ஈசியாக சிக்காது.
இப்போது காலத்துக்கு ஒவ்வாத உணவுகளின் ஆதிக்கம் அதிகமாகிவிட்டது. [நாமும் அதைத்தான் விரும்புகிறோம்]. இதனால் அதிகம் GERD எனப்படும் வியாதி நெஞ்சு எரிச்சல் அதிகமாகி விட்டது. இதனாலும் இதற்க்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் 'சுத்தம் சோறு போடும் ,ஆனம் ஊத்தும்' என நாம் பள்ளிக்கூடத்தில் படித்த நல்ல விசயங்களை நம் வீட்டுக்கு கொண்டுவர மறந்து விட்டோம்.
வெளியூர் போனால் நாம் அதிகம் விரும்பும் சைவ உணவை நாம் மத சாயம் பூசி தூர வைத்து விட்டோம்.
கீழ்காணும் தத்துவ ஞானிகளிடம் கவனமாக இருக்க கடவது.
'எனக்கு தெரிந்து ஒரு நண்பன் சைவம்தான் சாப்பிடுவார், அவருக்கு ஹார்ட்லெ அடைப்பாம் இதுக்கு என்ன சொல்றெ?'
"டாக்டர்னா அப்படித்தான் சொல்வான் அவன் சொல் கேட்டா பட்டினிதான் கெடக்கனும்''
மற்றும்
" ஆறிலும் சாவு நூறிலும் சாவு--இனிமேல் நூறுதான் மாப்லே " என சொல்லும்போது 'ஆறிலேயெ உன்னை தப்பிக்கவிட்டது யார்?" என கேட்க தோன்றும்.இவனுக கிட்டே நம்ம ஸ்டேசன் எடுக்காது என விலகி விடுவது நல்லது.
எடை அதிகரிப்பு , கட்டுப்பாடு இல்லாத உணவு இவைகளில் கவனம் செலுத்தாமல் சின்ன சின்ன உடற்பயிற்சி இவைகளை ஒதுக்கிவீட்டு "நேரம் எங்கே கிடைக்குது" என சொல்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது, உங்கள் சுகாதார வாழ்க்கைக்கு நீங்கள் ஆப்சென்ட் ஆகி எதுவும் செய்ய முடியாது. நீங்கள் பிரசென்ட் ஆக வேண்டும்.
மற்றபடி 'ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரை தூர அனுப்பிவிடலாம்" போன்ற பழமொழிகளை நம்பி இருந்து விடாதீர்கள், அதற்க்கும் சுகாதார வாழ்க்கைக்கும் 100 சதவீத தொடர்பு இல்லை அதுமாதிரி பழமொழி எல்லாம் ஆப்பிள் வியாபாரிகளின் ஆடித்தள்ளுபடி வியாபார யுக்தி.
ZAKIR HUSSAIN
 http://adiraixpress.blogspot.com/

Tuesday, July 13, 2010

மேற்கல்விக்காக ஏங்கும் ஏழை சகோதரனுக்கு உதவிடுங்கள்.

ஒருவர் நபி அவர்களிடம் வந்து; அல்லாஹ்வின் தூதரே! அதிக நன்மையுள்ள தர்மம் எது? எனக்கேட்டார் ''நீர் ஆரோக்கிய முள்ளவராகவும் பொருள் தேவை உடையவராகவும் வருமையைப் பயப்படுபவராகவும், செல்வத்தில் ஆசை உள்ளவராகவும் இருக்கும் நிலையில் தர்மம் செய்வதே அதிக நன்மையுள்ளதாகும். எனவே (தர்மம் செய்வதை) உயிர் தொண்டைக் குழியை நெருங்கும் வரை தாமதப்படுத்த வேண்டாம். அந்நிலையில் இன்னாருக்கு இவ்வளவு 'இன்னாருக்கு இவ்வளவு' என்று கூறுவதிலும் அர்த்தமில்லை. ஏனெனில் அப்போது உமது பொருட்களை மற்றவர்களுக்கென்று ஆகிவிட்டிருக்குமே! என நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்.


மாணவன் பெயர்:அஹமது
தந்தை பெயர்:        ஷேய்க் அப்துல்லா
தாய் பெயர்:           சகர் பானு
படிப்பு:                     12th standard
வயது                      18
மதிப்பெண்            962
அந்த மாணவனின் தந்தை எங்கிருக்கிறார் என தெரியவில்லை.தாய் EPS பள்ளியில் உஸ்தாதாக பணி புரிந்து கொண்டுள்ளார்.

மிகவும் கஷ்டப்படும் சூழ்நிலையில்,எப்படியும் மேற் படிப்பு படித்து முன்னேற வேண்டும் என துடிக்கும் இவருக்கு உதவ யாரும் இல்லாத நிலை.

இவருடைய இச் சூழ்நிலையை எண்ணி,அல்லாஹ்வுக்காக,இவருடைய கல்விக்கு உங்களால் முடிந்த அளவு உதவி,அல்லாஹ்வின் நல் அருளை பெற்றுக் கொள்வோம்.

அந்த மாணவனின் தொடர்பு முகவரி
 S.AHAMAD
29/12 GODOWN STREET,
ADIRAMPATTINAM
CONTACT # 9843535710

தகவல் உதவி :அப்துல் ரஜாக்
கலிபோர்னியா

அவசர வேண்டுகோள்

அன்பான அதிரைவாசிகளே,

நேற்று முதல் இம்மாதம் 15 தேதி வரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க, திருத்தம் செய்ய அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகையால் தங்களது பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இல்லாதவர்கள் விரைந்து பதிந்து கொள்ளுங்கள். இந்த வாய்ப்பை விட்டால் 2011 ல் தான் மீண்டும் பதிய முடியும் என்று தெரிகிறது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு
மக்கள் தொகை கணக்கெடுப்பு சென்ற மாதம் 1 தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்தியாவில் முஸ்லிம்கள் எத்தனை சதவீதம், அவர்களது வாழ்வாரம் பற்றி அரசுகளும், ஏனையோரும் தெரிந்து கொள்ள இந்த கணக்கெடுப்பு முக்கியமானது. ஆகையால் இதுவரை கணக்கெடுப்பு பற்றி தெரியாதவர்கள் அவசியம் இதில் பங்கெடுத்து தங்களது குடும்ப விவரங்களை பதிந்து கொள்ளுங்கள். வெளிநாட்டில் இருப்பவர்கள் அவசியம் உள்ளூரில் உள்ள குடும்பத்தினருக்கு நினைவூட்டுங்கள்.

Monday, July 5, 2010

தெரு வாரியாக அதிரை வாக்காளர் வரைவு பட்டியல்

வரைவு வாக்காளர் பட்டியல் ஜூலை-1, 2010 அன்று வெளியிடப்பட்டுள்ளது. நமது தேசியக் கடமையில் அதிரை எக்ஸ்பிரஸின் சிறு பங்களிப்பாக அதிரைவாசிகளின் வசதிக்காக தெருவாரியாகத் தொகுத்திருக்கிறோம்.

அவரவர் விபரங்களுடன் நண்பர்கள்,உறவினர்கள் விபரங்களையும் சரிபார்த்து குறை,பிழைகள் இருந்தால் சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரிவித்து தேவையான திருத்தங்களைச் செய்ய வழிகாட்டவும்.


முஸ்லிம் பெயர்களை சரிவரப் பதியாமல் பல பெயர்கள் அடையாளம் காணச் சிரமமாக உள்ளன. சுவாரஸ்யமான இன்னொரு விசயம் நமதூர் அதிரையில் இத்தனை தெருக்களா? என்ற வியப்பும் எழுவதாகும்!
 
முழு அதிரை வாக்காளர்கள் விபரங்களைக் காண சுட்டியை அழுத்தவும்.
தெருவாரியாக கீழுள்ள சுட்டிகளை அழுத்தி காணலாம்.

பாகம் - 177
1-மழவேனிற்காடு வார்டு-1
2-நடுவிக்காடு வார்டு-2
3-மிலாரிக்காடு வார்டு-2
-----------------------------
பாகம் - 178
1-புதுமனைத்தெரு வார்டு-3
-----------------------------
பாகம் - 179
1-அம்பேத்கர் தெரு வார்டு 21
2-ஆலடித் தெரு வார்டு 21
------------------------------
பாகம் - 180
1-மதுக்கூர் ரோடு வார்டு-1
2-மன்னப்பன்குளம் வடகரை வார்டு-2
3-மன்னப்பன்குளம் மேல்கரை வார்டு-3
4-நேருஜி தெரு வார்டு-4
5-செக்கடித்தெரு வார்டு-6
6-பிள்ளையார் கோவில் தெரு வார்டு-6
--------------------------------
பாகம் - 181
1-ஹாஜியா£¢ லைன் வார்டு-1
2-சங்கத்துக்கொல்லை வார்டு-3
3-சால்ட்லைன்ரோடு வார்டு-4
4-தோப்புக்காடு வார்டு-5
5-வீரனார் கோவில் தெரு வார்டு-6
6-அண்ணாதெரு வார்டு-7
7-சால்ட்லைன் வார்டு-8
---------------------------------
பாகம் - 182
1-சுப்பிரமணியார் கோவில் தெரு வார்டு-4
2-செல்லியம்மன்கோவில் தெரு, வார்டு-12
---------------------------------
பாகம் - 183
1-செல்லியம்மன்கோவில் தெரு, பழஞ்செட்டித் தெரு வார்டு
2-சுப்பிரமணியசாமி கோவில் தெரு வார்டு-4
----------------------------------
பாகம் - 184
1-மாரியம்மன் கோவில் தெரு (கரையூர் தெரு வார்டு-1)
----------------------------------
பாகம் - 185
1-மாரியம்மன் கோவில் தெரு (கரையூர் தெரு)வார்டு-1
2-சிவன் கோவில் தெரு வார்டு-5
3-பெரியார் தெரு, வடுகார் தெரு வார்டு-5
4-பாரதியார் தெரு வார்டு-5
5-கரையூர் தெரு வார்டு-1
-----------------------------------
பாகம் - 186
1-தைக்கால் தெரு வார்டு-7
2-கடற்கரைத்தெரு (காந்தி நகர்) வார்டு -8
3-ஆறுமுக கிட்டங்கித் தெரு வார்டு-7
------------------------------------
பாகம் - 187
1-தரகர் தெரு (ஆசாத் நகர்) வார்டு-1
2-கடற்கரைத் தெரு -வார்டு -2
------------------------------------
பாகம் - 188
1-இரயில்வே லைன் வார்டு-1
2-கடற்கரைத் தெரு வார்டு-2
3-ஷேக் உதுமான் தெரு வார்டு-3
------------------------------------
பாகம் - 189
1-புதுகடைத் தெரு வார்டு-15
2-திலகா¢ தெரு வார்டு-11
3-புதுத்தெரு தென்புறம் வார்டு-11
------------------------------------
பாகம் - 190
1-சேது ரோடு,பி1,ஹாஜா நகர் வார்டு-1
------------------------------------
பாகம் - 191
1-சேது ரோடுவார்டு-4
2-புதுத் தெரு, வடபுறம்வார்டு-12
3-முத்தம்மாள் தெரு வார்டு-11
------------------------------------
பாகம் - 192
1-கீழத்தெரு வார்டு-1
------------------------------------
பாகம் -193
1-புதுநெய்க்காரத்தெருவார்டு-15
2-மேல்வடபுறம் வார்டு-17
------------------------------------
பாகம் - 194
1-புதுநெய்க்காரத்தெரு வார்டு-15
2-மேல்வடபுறம் வார்டு-17
------------------------------------
பாகம் - 195
1-மேல கீழ்புறம் வார்டு-17
2-வள்ளியம்மை நகர் வார்டு-20
3-காளியார் தெரு வார்டு-14
4-மிலாரிக்காடு வார்டு-20
------------------------------------
பாகம் - 196
1-மேல கீழ்புறம் வார்டு-17
2-வள்ளியம்மை நகர் வார்டு-20
3-காளியார் தெரு வார்டு-14
4-மிலாரிக்காடு வார்டு-20
------------------------------------
பாகம் - 197
1-புதுத்தெரு வடபுறம் வார்டு-12
2-நடுத்தெரு கீழ்புறம் வார்டு-13
3-நடுத்தெரு, கடைசிசந்து வார்டு-13
4-நடுத்தெரு, மேல்புறம் வார்டு-14
-------------------------------------
பாகம் - 198
1-ஆஸ்பத்திரி தெரு வார்டு-12
2-வ உ சி தெரு வார்டு-13
3-நேதாஜி தெரு வார்டு-13
4-பெருமாள் கோவில் தெரு வார்டு-12
--------------------------------------
பாகம் - 199
1-பேய்க்காலிக்காடு வார்டு-1
2-மங்கனங்காடு, மேற்கு வார்டு-2
3-வள்ளிக்கொல்லைக்காடு வார்டு-2
4-முடுக்குகாடு, வார்டு-2
5-நரசிங்கபுரம் வார்டு3

Sunday, July 4, 2010

அதிரையில் பொதுக் கூட்டம்

இந்திய தவ்ஹீத் ஜமாத் சார்பில் நேற்று 2-7-2010 அன்று அதிரை தக்வா பள்ளி அருகில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பாக்கர், செங்கிஸ்கான் மற்றும் பலர் கலந்து கொண்டு பேசினார்கள்.