Sunday, December 5, 2010

வட்டிக்கு பணம் கொடுக்கக் கூடாது என ஜெயின், மார்வாடி சமூகத்தை நாங்கள் கேட்டுக் கொள்ளலாமா?

இறைச்சி கடைகளை எட்டு நாட்களுக்கு மூட வேண்டும் என ஜெயின் அமைப்பு அளித்த கோரிக்கையை, தமிழக அரசு நிராகரித்துள்ளது. இதையடுத்து, சென்னை மட்டன் வியாபாரிகள் சங்கத்தின் மனுவை, ஐகோர்ட் பைசல் செய்தது.

சென்னை மட்டன் வியாபாரிகள் (சில்லறை) சங்கம் தாக்கல் செய்த மனு: எங்கள் சங்கத்தில் உள்ள பெரும்பாலோர், சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள். பல ஆண்டுகளாக இறைச்சி விற்பனையில் உள்ளனர். மகாவீர் நிர்வாண் தினத்தை ஒட்டி, இறைச்சிக் கூடம், இறைச்சி விற்பனை கடைகளை மூட வேண்டும் என ஜெயின் அமைப்பு, அரசிடம் கோரியது. அதன்படி, ஜனவரி 23ம் தேதி கடைகளை மூட வேண்டும் என, அரசு உத்தரவிட்டது. ஆண்டுதோறும் இதை பின்பற்றி வருகிறோம். சிறுபான்மை சமூகத்தினர், குறிப்பாக முஸ்லிம், கிறிஸ்தவ மக்களின் உணர்வுகளை கருத்தில் கொள்ளாமல், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இருந்தாலும், அதை பெருந்தன்மையுடன் நாங்கள் ஏற்றுக் கொண்டோம். தற்போது, "பரியுஷன் பர்வா' என்ற நிகழ்ச்சியை ஒட்டி, எட்டு நாட்கள் இறைச்சி கடைகளை மூட வேண்டும் எனக் கோரி, ஐகோர்ட்டில் தமிழ்நாடு ஜெயின் மகாமண்டல்  அமைப்பு மனு தாக்கல் செய்துள்ளது. ஜெயின் அமைப்பு அளித்த மனு மீது முடிவெடுக்க  ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

சைவ உணவில் நம்பிக்கை கொண்டவர்களாக ஜெயின் அமைப்பு இருக்கலாம். அதற்காக, அசைவ உணவு சாப்பிடுபவர்களிடம், தங்கள் கொள்கையை திணிக்கக் கூடாது. இறைச்சி விற்பனை செய்வது எங்கள் அடிப்படை உரிமை. எங்கள் மதத்தில், வட்டிக்கு பணம் கொடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. எனவே, ரம்ஜான் மாதத்தில், வட்டிக்கு பணம் கொடுக்கக் கூடாது என ஜெயின், மார்வாடி சமூகத்தை நாங்கள் கேட்டுக் கொள்ளலாமா? அவர்களது பிரதான வர்த்தகமே அடகு கடை, வட்டிக்கு பணம் கொடுப்பது தான். நாங்கள் அவ்வாறு ஒரு கோரிக்கையை முன்வைத்தால், அந்த சமூகத்தினர் ஆட்சேபம் தெரிவிப்பர். எனவே, எட்டு நாட்கள் இறைச்சி கடையை மூட வேண்டும் என கோருவது நியாயமற்றது. எங்கள் சங்கம் சார்பிலும் மனு அளித்துள்ளோம். அதன் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனுவை நீதிபதிகள் தர்மாராவ், அரிபரந்தாமன் அடங்கிய "டிவிஷன் பெஞ்ச்' விசாரித்தது. மனுதாரர் சார்பில் வக்கீல்கள் ஜி.வாசுதேவன், சுமியுல்லா, அரசு சார்பில் அரசு வக்கீல் அசன் பைசல், மாநகராட்சி சார்பில் வக்கீல் முகமது கவுஸ் ஆஜராகினர்.

"டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:  ஒவ்வொரு ஆண்டும் மகாவீர் ஜெயந்தி, மகாவீர் நிர்வாண் தினத்தை ஒட்டி, இறைச்சி கடைகளை மூட வேண்டும் என அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும், "பரியுஷன் பர்வா' நிகழ்ச்சியை ஒட்டி, எட்டு நாட்கள் இறைச்சி கடைகளை மூட வேண்டும் என கோரியதை ஏற்க முடியாது என்றும், இதுதொடர்பாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் அரசு வக்கீல் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு ஜெயின் மகாமண்டல் அமைப்பின் மனு மீது அரசு முடிவெடுத்துள்ளதால், மேற்கொண்டு உத்தரவு பிறப்பிக்க தேவையில்லை என கருதுகிறோம். இந்த ரிட் மனு பைசல் செய்யப்படுகிறது. இவ்வாறு "டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.

Sunday, November 28, 2010

இறந்த கழுதையின் பிணத்தை தின்பதை விட கேடானது

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின்சபையில் 'மாயிஸ்என்ற தோழர் வந்துதான் ஒரு பெண்ணுடன் தவறானமுறையில் நடந்து கொண்டதாகச் சொன்னார்அவரின் சொல்லை நபிகள்(ஸல்அவர்கள் புறக்கணித்தவர்களாக இருந்தார்கள்எனவே அவர்மீண்டும் மீண்டும் சொன்னார்நான்கு தடவை சொல்லி முடித்தார்.அப்பொழுதும் பெருமானார் அவர்கள் எதுவும் பேசவில்லை.
ஐந்தாவது முறை அவர் சொல்லும்போது அவரிடம் 'நீர் அவளுடன்உடலுறவு கொண்டீரா?' என்று கேட்டார்கள். 'ஆம்!' என்றார்கள் மாஈஸ்அவர்கள். 'உன்னில் நின்றும் 'அதுஅவளின் நின்றும் 'அதிலே'மறையுமளவுக்கு நடந்தீரா?' என்று மீண்டும் வினவினார்கள்.
மறுபடியும் 'ஆம்!' என்றார்கள் மாஈஸ்.
அப்பொழுதும் மாஈஸ் அவர்களை  குற்றவாளி என்று ஒப்ப பெருமானார்(ஸல்)  அவர்களுக்கு மனம் வரவில்லைமேலும் தொடர்ந்து பல கேள்விகள்கேட்டார்கள். 'சுர்மா புட்டியிலே சுர்மா குச்சி மறைவது போலவும்,கிணற்றுக்குள்ளே கயிறு மறைவது போலவும் மறைந்ததா?' என்றும்கேட்டார்கள்.
'ஆம்!' என்றே மறுபடியும் தக்வா நிறைந்த அந்த ஸஹாபி கூறினார்.
'விபச்சாரம் என்றால் என்னவென்று தெரியுமா?' என்று கேட்டவுடன்அவர்விஷயத்தை படு பயங்கரமாக வெளிப்படுத்த விரும்பியவராக, 'ஆம்ஓர்ஆண்மகன் தன் மனைவியுடன் 'ஹலாலாகநடந்து கொள்வானே அதேகாரியத்தை அப்பெண்ணுடன் நான் 'ஹராமாகநடத்தி விட்டேன்'என்றார்கள்.
'இவ்வாறு சொல்வதன் மூலம் உமது நோக்கம் யாது?' என்று இறுதியாகக்கேட்டார்கள். '(இக்குற்றத்திற்கான தண்டனையை நிறைவேற்றுவதன்வாயிலாகஎன்னை தூய்மைப்படுத்திக் கொள்ள விரும்புகின்றேன்எனஇறையச்சம் நிரம்பி நின்ற அந்த  ஸஹாபி  பதிலளித்தார்கள்.
தாம் செய்த குற்றத்தை தாமே மனமுவந்து விண்ணப்பித்து,தண்டனையை ஏற்றுக்கொள்ள முன்வந்து விட்ட பிறகு வேறு வழியின்றிஅவருக்கு விபச்சாரத்திற்குரிய தண்டனையை நிறைவேற்ற அண்ணலார்அவர்கள் ஆணையிட்டார்கள்அதன்படி நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் தோழர் இருவர் பேசிக் கொண்டிருப்பது நபி (ஸல்அவர்களின்செவிகளில் விழுகிறதுஒருவர் சொல்கிறார், 'பார்த்தீரா அவரை!அல்லாஹ்வே அவரது குற்றத்தை மறைத்து விட்டான். (வேறு யாரும் அவர்செய்ததை காணவில்லைஎனினும் அவர் மனம் விடவில்லைதாம் நடந்துகொண்டதை பகிரங்கமாக எடுத்துக் கூறியதால் இப்போது நாயை அடிப்பதுபோல அடித்து சாகடிக்கப்பட்டார்என்று பேசிக் கொண்டார்கள்இதைக்கேட்ட பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்ஒன்றும் பேசாமல் மவுனமாக இருந்து விட்டார்கள்.சற்று நேரம் சென்றதுவழியில் ஒரு கழுதை செத்துப் போய் அதன் வயிறுஊதிய வண்ணம் காலைத் தூக்கிக் கொண்டு பார்ப்பதற்கே அவலட்சணமாகக்காட்சியளித்தது.
அதைக்கண்ட அண்ணல் நபி (ஸல்அவர்கள் இன்னாரும் இன்னாரும்எங்கேஎன்று சற்று முன் பேசிக் கொண்டிருந்த அவ்விருவரையும்அழைத்தார்கள்இருவரும் அருகில் வந்தவுடன்''நீங்கள் இருவரும் அந்தப்பள்ளத்தில் இறங்கி அந்த கழுதையின் பிணத்தின் மாமிசத்தைத்திண்ணுங்கள்!'' என்றார்கள்அதை கேட்டு அதிர்ந்து போன அவ்விருவரும், ''நாயகமே!  இதை யாராவது சாப்பிடுவார்களா?' என்று பதறிப்போய்கேட்டார்கள்.
அண்ணலம் பெருமானார் (ஸல்அவர்கள் அமைதியாக அவர்களிடம், ''நீங்களிருவரும் சற்று முன்னர் உங்களின் சகோதரரைப் பற்றி பேசிக்கொண்டிருந்ததுஅந்த கழுதையின் பிணத்தை திண்பதை விடவும் மிகக்கொடியதாகும்.
எனது ஆன்மா எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது அணையாகஇப்பொழுது அவர் (விபச்சாரம் செய்ததற்குப் பரிகாரமாககொல்லப்பட்டவர்சுவனத்தின் ஆறுகளில் மூழ்கி ஆனந்தித்துக்கொண்டிருக்கிறார்'' என்று கூறினார்கள்.
அபூஹுரைரா (ரழிஅவர்கள் அறிவிக்கும் இந்த செய்தியை இமாம்அபூதாவூது (ரஹ்அவர்கள் பதிவு செய்துள்ளார்கள். (நூல்மிஷ்காத் - பக்கம்316)
சகோதர சகோதரிகளே!
விபச்சாரத்திற்குரிய தண்டனை பெற்றவர் உலகின் கண்களுக்குகேவலமாகவும்இழிவாகவும் காட்சியளிக்கலாம்ஆனால்அவர்தவறிலிருந்து தூய்மை பெற்று விடுகின்றார்மரணத்திற்குப்பின்சுவர்க்கவாசியாகி விடுகிறார் என்பது இங்கே ஒரு முக்கியமானவிஷயமாகும்.
அடுத்துஒருவரைப்பற்றி இழிவாகப் பேசுவது கழுதையின் அழுகிப்போனபிணத்தை திண்பதைவிட கேடுகெட்டதாகும்இதை நாம் புரிந்துதிருந்துவோமா? ''புறம்பேசுவது என்றால் என்னவென்று அறிவீர்களா?''என்று முஹம்மது (ஸல்அவர்கள் வினவதோழர்கள் ''அல்லாஹ்வும்அவன் தூதருமே நன்கறிந்தவர்கள்'' என்று கூறினார்கள்.
உன் சகோதரன் அருகில் இல்லாதபோது அவன் கேள்விப்பட்டால்வருந்தக்கூடிய செய்திகளைப் பேசுவதுதான் ''புறம் என்பது'' எனப்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்சொன்னார்கள்.
நாயகமே! (ஸல்நான் அவரிடம் இருப்பதைத்தானே பேசுகிறேன்அதுவும்புறம் ஆகுமாஎன ஒருவர் அடுத்துக் கேட்க, ''ஆம்அவரிடம் உள்ளதைக்கூறினால் தான் புறம்இல்லாததைக் கூறினால் அது அவதூறு எனும்பெரும் குற்றமாகிவிடும்'' என்று நபி (ஸல்)  அவர்கள் விளக்கினார்கள்.

கழுதையின் பிணத்தைவிட மோசமான உணவைத் திண்ணுவதற்குஎவரேனும் விரும்புவோமா என்னஎனவே இனியாவது தவ்பா செய்துபுறம்மற்றும் அவதூறு பேசுவதை நிறுத்திக் கொள்வோம்நமது நாவைப்பேணுவோம்நல்வழி நடப்போம்அல்லாஹ் அருள்புரிவானாகஆமீன்.

-மவ்லவி லியாகத் அலீ மன்பஈபேட்டை.
நன்றி நீடுர்.இன்போ