Friday, January 21, 2011

நான் ஏன் முஸ்லிம் ஆனேன்?

சமீபத்தில் பெரியார்தாசன் ‘அப்துல்லாஹ்’ ஆக இஸ்லாத்தில் இணைந்த செய்தி பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.           தமிழகத்தில் ஓசைப்படாமலேயே இஸ்லாத்தை உணர்ந்து இணையும் நிகழ்வுகள் ஆங்காங்கே அவ்வப்போது நிகழ்ந்து கொண்டுதானிருக்கின்றன. பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூரைச் சேர்ந்தவர் சு. ராஜேஸ்வரன். 


திருச்சி தேசிய கல்லூரியில் M.Sc., (Geology) பயின்று சுய தொழிலாக மெடிகல் ஷாப் வைத்துச் சமூக சேவை ஆற்றி வருபவர். இவரது பெற்றோர் சுப்புசாமி – அழகம்மாள் இந்து தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த விவசாயக் கூலிகள் ஆவர். தீவிர அம்பேத்கர் இயக்கத் தவராகத் திகழ்ந்த சு. ராஜேஸ்வரன்மொழி, இனம், பொதுவுடைமை, கம்யூனிசம் எனும் இவையெல்லாம் சமூக ஏற்றத்தாழ்வை ஒழிக்க இயலாதவை; உண்மையான சமத்துவத்தை ஏற்படுத்த இயலாதவை என்பதைத் தெளிந்து, ஏகத்துவத்தை ஏற்று அதன் வழிதான் சமூக நீதியையும், சமத்துவத்தையும் நிலைநாட்ட முடியுமென்பதை உணர்ந்து இஸ்லாத்தில் இணைந்துள்ளார். சு. ராஜேஸ்வரன் இப்போது சு. ராஷித் அலியாகவும் இவரது மனைவி சாந்தி இப்போது சாரா பீவியாகவும் சமுதாயச் சேவையிலும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்கள்.

இஸ்லாத்தில் இணைவதற்குத் தனக்கு அடிப்படைச் சிந்தனையாக அமைந்தது எது என்பதை இதோ அவர் விளக்குகிறார். மொழியாலோ, இனத்தாலோ, பொதுவுடைமையாலோ, கடவுள் மறுப்பாலோ சமூகத்தில் புரட்சி ஏற்பட்டு அதன் மூலம் ஒரு சமுதாயம் உருவாக்கப்படுவதாக வைத்துக் கொண்டாலும் சாதிய கட்டமைப்பு ஒழிக்கப்படாதவரை அது ஓர் உண்மையான நிலையான சமத்துவமிக்க சமுதாயமாக இருக்க சாத்தியமே இல்லை என்கிற புரட்சியாளர் அம்பேத்கர் கருத்தியலை மையமாக கொண்டதே எனது கருத்தியல்.

மொழி, இனம், பொதுவுடைமை, கடவுள் மறுப்பு என்கிற கருத்து நிலைகளை மையமாக வைத்துக் கொண்டு சதுரங்கம் விளையாடுகிற அலங்காரமான அரசியல்வாதிகளை அல்லது சீர்திருத்தவாதிகளைக் கடந்த காலங்களிலும் சமகாலத்திலும் பார்க்க முடிகிறது. ஆனால் இவர்களெல்லாம் சமத்துவத்தை உருவாக்க கூடிய மூல செயல் வடிவமான சாதி ஒழிப்பை மட்டும் லாவகமாகத் தவிர்த்துவிட்டே வந்திருக்கிறார்கள் என்பதையும் உணர முடிகிறது. சாதி ஒழிப்பைக் கூர்மைப்படுத்தினால் இந்துத்துவம் உடைந்து சுக்கு நூறாகி இருக்கும் இடம் தெரியாமல் அழிந்துபோய்விடும்… என்பதை இவர்களெல்லாம் அறியாதவர்கள் அல்ல.

இவர்களை பொறுத்தவரை முதலில் இந்துத்துவத்தைக் காப்பாற்றி வைத்துக் கொண்டுதான் மற்ற எல்லா வகையான சீர்திருத்தத்தையும் பேச வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். காரணம் என்ன வென்றால் அடிமைகள் இருந்தால்தானே தனக்கான தளம் இருக்கும். அப்படிப்பட்ட தளம் இருந்தால்தானே அதன் மேலே வலுவாக நின்று கொண்டு தொடர்ந்து கூச்சல் போட முடியும். அப்படி கூச்சல் போட்டால் தானே தன்னை அடையாளம் காட்டிக் கொண்டு தனது பிழைப்பை நடத்த முடியும் என்கிற தீர்க்கமான முற்போக்கான அறிவாளிகள்தாம் இந்த தேசம் முழுக்கப் பரவிக் கிடக்கிறார்கள் என்பதையும் உணர்ந்து கொள்ள முடிகிறது.

கருத்துநிலை சீர்திருத்தங்கள் எல்லாம் வெறும் வெற்றுப் பேச்சுகள் தாம் அவற்றால் விளிம்பு நிலை மனிதர்களுக்கு எவ்விதமான சமூக விடுதலையையும் ஏற்படுத்தித் தரமுடியாது என்பதையும் உணர முடிந்தது. விளிம்பு நிலை மனிதர்களுக்கான தீர்வு சமூக சீர்திருத்தமா? அல்லது சமூக விடுதலையா? என்கிற கேள்வி வருகிறபோது சமூக விடுதலைதான் என்கிற புரட்சியாளர் அம்பேத்கர் கருத்தியல்தான் நிரந்தரமானது என்கிற உண்மையை அறிவுத் தளத்தில் அனைவரும் ஏற்றுக் கொண்டாக வேண்டும். ஆனால், தனது அற்ப பிழைப்பு வாதத்துக்காக விளிம்பு நிலை மக்களின் சமூக விடுதலையை விட்டு விட்டு வெறும் சீர்திருத்தநோக்கிலேயே செயல்பட்டு வரும் இவர்களை எண்ணி நெஞ்சம் ரணமாகிறது.

மொழியால், இனத்தால், பொதுவுடைமையால் கடவுள் மறுப்பால் மக்களை ஒன்று சேர்ப்பதாகவும் அதன் மூலம் சமத்துவம் உருவாகும் என்றும் சொல்பவர்களைப் பார்த்து ஒரு கேள்வி எழுகிறது. மொழியாலும் அந்த மொழி பேசுகிற இனத்தாலும் ஒன்றுபடலாம் என்பதில் மிகுந்த மகிழ்ச்சிதான். ஆனால் ஊரை உருவாக்கும்போதே சேரியை உருவாக்கி அந்த மக்களைத் தீண்டதகாதவர்களாக்கிப் பொதுப் பாதை, பொதுக்குளம், பொதுக்கோயில் இப்படி அனைவருக்கும் பொதுவான அனைத்து வகையான இடத்திலிருந்தும் தள்ளிவைத்து அவர்கள் வாழும் சேரி, குடிசைகளைக் கொளுத்திக் கொலை வெறித் தாண்டவம் ஆடியது யார்? ஜெர்மானியமொழி பேசுகிற ஜெர்மானியர்களா? அல்லது சீனமொழி பேசுகிற சீனர்களா? இல்லையே விளிம்பு நிலை மனிதர்கள் தாய்மொழியாக கொண்ட அதே தமிழ் மொழி பேசுகிற தமிழ் இனம்தானே.

பொதுவுடையைப் பேசுகிற கம்யூனிசவாதிகளாவது உழைக்கும் வர்க்கமெல்லாம் ஒரே வகைப்பாடுகளில் உள்ளவர்கள், நமக்குள் வர்க்க வேற்றுமைதவிர சாதிய வேற்றுமைகள் எதுவும் கிடையாது. உழைக்கும் வர்க்கம் என்கிற அடிப்படையில் ஒரே இடத்தில் வாழ் விடங்களை அமைத்துக் கொள்வது, சமூக ஒழுங்கிற்கு உட்பட்டு உழைக்கும் வர்க்கத்தாரின் யாருடைய வீட்டிலும் யாரும் திருமண பந்தம் வைத்துக் கொள்வது என்கிற செயலாக்கத்தைக் கொண்டு வந்தார்களா? மாநில அளவில் வேண்டாம் குறைந்தபட்சம் ஒரே ஒரு கிராம அளவிலாவது இந்தியாவின் எந்த மூலைப் பகுதியிலேனும் ஒரு புரட்சிகரமான கிராமத்தை அவர்களால் உருவாக்க முடிந்ததா? (சாதிய கட்டமைப்புகளைக் கொண்ட இந்தியாவில் மார்க்சியம் செல்லுபடியாகாது) என்று சொன்ன புரட்சியாளர் அம்பேத்கர் கருத்தியல்தானே இன்று உண்மைக்குச் சாட்சியாக நிற்கிறது.)

கடவுள்தான் சாதிய கட்டமைப்புகளை உருவாக்கி வழிநடத்துகிறது என்றும் ஏற்றத்தாழ்வுகள் அனைத்திற்கும் சாமிதான் காரணம் என்றும் “கடவுளை மற மனிதனை நினை” என்று சொல்லி வந்தார்களே இவர் களாவது சாதி ஒழிப்பை முன்னெடுத்தார்களா? சாதி மறுப்புத் திருமணங்கள், வாழ்விடங்கள் குடியிருப்புகள் என ஒரே இடத்தில் அமைத்துக் கொண்டு வாழ்வது போன்ற அடிப்படையான விஷயங் களில் ஒன்றிணைந்தார்களா? கடவுள் மறுப்பாளர்கள் என்பதால் புரோகிதர் மறுப்பில் கவனம் செலுத்தியவர்களால் பாவம் சாதி மறுப்பில் கவனம் செலுத்த முடியவில்லை போலும். (இப்படி கூறுவதனால் பகுத்தறிவாதிகளைக் குற்றம் குறை சொல்லுவதாகவோ அவர்கள் விளிம்புநிலை மக்களுக்காக நடத்திய போராட்டங்களைக் கொச்சைப்படுத்துவதாகவே எண்ணி மிகுந்த பிணக்கு கொள்வார்கள்.)

மேற்படி கொள்கைவாதிகளிடம் கேட்பதற்கு இன்னும் ஆயிரக் கணக்கான கேள்விகள் உண்டு. இங்கே சொல்லப்பட்டவைகள் அனைத்தும் மிக மிக சாதாரண அடிப்படையானவைகள் மட்டும்தான். இதற்கே இவர்களிடம் பதில் இருக்காது. அவர்களைப் பார்த்து, அம்பேத் கரியம் கேட்கும் கேள்வி ஒன்றே ஒன்றுதான்; உங்களின் போராட்டங்கள், தியாகங்கள், உயிரிழப்புகளுக்கான கருத்தியலால் சாதி ஒழிக்கப்பட்ட சமத்துவ சமூகத்தை இன்றுவரை ஏன் உருவாக்க முடிய வில்லை. அப்படியானால் “சாதிய கட்டமைப்பை அழித்தொழிக்காமல் எந்த கருத்தியலும் மக்களிடம் புரட்சியை உருவாக்காது. அப்படி ஒரு புரட்சி நடக்காமல் சமத்துவ சமூகத்தைக் கட்டமைக்க முடியாது” என்று கூறிய இருபதாம் நூற்றாண்டின் பேரறிஞர் புரட்சியாளர் அம்பேத்கர் சொன்னவைதாமே இன்றைக்கும் விளிம்புநிலை மனிதர் களாக, பஞ்சைப் பராரிகளாக குடிசைகளிலே வாழ்க்கை நடத்தும் கடைசி மனிதர்களுக்கு உண்மைகாட்சியாய் நிற்கிறது. அத்தனை பெரிய அறிவு படைத்த மேதை புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் 1936 ம் ஆண்டில் சாதியை ஒழிக்கும் வழிகளாக (Annihilation Of caste) மிகத் தீர்க்கமான கருத்தியலை முன் வைத்தார்கள். யாராவது கண்டு கொண்டார்களா?

தன் வாழ்நாளின் இறுதி மூச்சு நிற்கும் வரை விளிம்பு நிலை மனிதர் களுக்காகவே வாழ்ந்த அந்த மாமனிதர் இறுதியாக தனது நெஞ்சம் நிறைந்த துன்பத்தோடும் மிகுந்த ஆதங்கத்தோடும் அதிர்ச்சியோடும் சொன்னார்கள்.

சாதியத்தின் மூலம் இழிவுகளையும் ஏற்றத்தாழ்வு பாகுபாடுகளையும் உருவாக்கியது இந்துத்துவம்தான். இப்படி மனிதனைச் சாதி ரீதியாகக் கொடுமைப்படுத்திய கொடூரம் உலகத்தின் எந்த மூலையிலும் நடத்தப் படவில்லை. ஆகவே இந்திய தேசத்தில் சமத்துவ சமூகத்தை உருவாக்க முனையும் எவராக இருந்தாலும் இந்துத்துவம் என்கின்ற ஒன்று ஒழிக்கப்பட்டால்தான் சமத்துவம் சாத்தியமாக்கப்படும் என்பதையும் இந்துத்துவத்தை ஒழிக்க முனையும் முன்பாக முதலில் தன்னை இந்து அல்லாதவனாக்கிக் கொள்ள வேண்டும் என்பதையும் உணர்ந்தே இருக்கிறார்கள். ஆனாலும் தன்னை ஒரு இந்துவாகவே நிலைப்படுத்திக் கொண்டேதான் இந்துத்துவத்தை வேரறுக்கப் போகிறேன் என்கிறார்கள். இது விந்தையாக இருக்கிறது.

ஒரு மரத்தின்மீது அமர்ந்துகொண்டு அந்த மரத்தை ஆணி வேரோடு சாய்க்கமுடியாது என்பது எந்த அளவிற்கு அறிவுப்பூர்வமான உண்மையோ அதைப் போன்றுதான் மேற்படியாளர்களின் இந்துத்துவ ஒழிப்பு என்பதும் என்று கூறிய புரட்சியாளர் அம்பேத்கர், நம்மை சமூகத்தின் விளிம்பு நிலைக்குத் தள்ளிக் கடைசி மனிதனாகக் குடிசையிலே உட்காரவைத்து சமூகத்தில் உள்ள அனைத்துக் கொடூரங் களையும் செய்து வருகின்ற இந்து சமூகத்தில் இருந்து நம்மை நாமே வெளியேற்றிக்கொண்டு தான் நம்மீது திணிக்கபட்டுள்ள சாதிய இழிவைத் துடைக்க முடியுமே ஒழிய வேறு எத்தகைய தீர்வும் சாத்தியமானது அல்ல என்று உறுதிபட கூறினார்.

அதனடிப்படையிலேயே மொழியும் இனமும் எம்மைசமமாகப் பார்க்க வில்லை. பொதுவுடைமையும் கம்யூனிசமும் எமது இழிந்த நிலையை ஒழிக்கவில்லை, ஆகவே கடவுள் இல்லை என்று சொல்லிக்கொண்டு சாதிய சகதியில் உழலுவதைவிட இறைவனை ஏற்று கொண்டாவது சாதியத்தை ஒழிப்பதுதான் எமக்கான சமூக விடுதலை என்று உறுதியாக எண்ணியே “லா இலாஹ இல்லல்லாஹ் முகம்மதுர் ரஸுலுல்லாஹ்” என்கிற உயிர்ப்பான வரிகளை நெஞ்சம் நிறையச் சொல்லி இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக் கொண்டேன்”

நன்றி : இனிய திசைகள்.(ஏப்ரல் 2010)


http://peacetrain1.blogspot.com/2010/07/blog-post_20.html

Saturday, January 8, 2011

வீடியோவில் பெண்கள் போஸ்கொடுப்பதால்

வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ் ஆஹா!இதோ பார்!சூப்பர் ஃபிகர்! ஸ்டில் போடப்பா என்று ஒருவர் சொல்கின்றார். மற்றொருவர் ரீவைண்ட் பண்ணப்பா! தூள் பரத்துகிறது என்கிறார்.
ஏ இது யாரப்பா? இவர் சம்சுகனி சம்சாரம். அது யாரப்பா? ஆள் அசத்தலா இருக்கே? இது நம்ம காதர் தங்கச்சி!
கலகலப்பாக ஓடிக் கொண்டிருக்கும்.இவை எல்லாம் எங்கு நடக்கின்றன என்கிறீர்களா?
சாதிசமய பேதமற்று எம்மதமும் சம்மதம் என்ற கோட்பாட்டின்படி சர்வ சமயத்தவரும் சங்கமமாகிதங்கியிருக்கும்
அரபு நாட்டின் அறைகளில் தான்.தங்களுக்கு முன்னால் ஓடிக் கொண்டிருக்கும் வீடியோகாட்சிகளுடன் மேற்கண்ட வீடியோ கமென்டரிஉரையாடல்களும்
மார்க்கப் பணிகளுக்காகவும்,மார்க்கப் பிரச்சாரத்தைக் கேட்பதற்காகவும் மட்டுமே தங்கள் விடுமுறை நாட்களை அர்ப்பணிக்கும் சகோதரர்களும் அரபகத்தில் இருக்கின்றார்கள்.
இங்கு நாம் குறிப்பிடும் சங்கதிகளும் அரபகத்தில் நடக்காமல் இல்லை.
வீடியோவில் பெண்கள் போஸ்கொடுப்பதால் ஏற்படும் விளைவுகளைச் சுட்டிக்காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கம்)(அரபு நாடு என்றவுடன் அங்கு பணிபுரியும் எல்லோருமே இப்படித் தான் என்று விளங்கிக்கொள்ளக் கூடாது.
எல்லாம் நம் வீட்டுத் திருமணத்தில் எடுக்கப்பட்ட வீடியோ தான்.ஆக அந்த அறையே ஒரு சிறிய வீடியோ திரையரங்காகமாறி நிற்கும். இந்த வீடியோ படப்பிடிப்பு எங்குநிகழ்ந்தவை?
என்றுகேட்கும் அளவுக்கு வீடியோ கலாச்சாரமும்அநாச்சாரமும் கொடி கட்டிப் பறக்கின்றது.நம் வீட்டில் கல்யாணம் என்றதும் வீடு களைகட்டிநிற்கின்றது. வீடியோ இல்லாத திருமணமா?

வீதியில் உலாவரும் வீடியோ கேமரா 
மற்றும் ஊரின் புகழைச் சொல்கின்றபுராதனச் சின்னங்கள் தான். இதன் பின் காலையில் கல்யாண வீட்டுக்குள் கேமரா
நுழைந்து டீ காப்பி சப்ளை,டிபன், மணமகன் மணமகள் அலங்காரம் என்று மணமகனும் மணமகளும் மணவறையில் நுழைகின்றவரை கேமரா பின் தொடர்ந்து சென்று ஒரு வழியாக்கிவிட்டுத் தான் வெளியேறும்.கல்யாணம் வீட்டில் நடந்தாலும் முதன்முத ல்காட்சியாவது முச்சந்தியில் நிற்கும் பள்ளிவாசல்அல்லது தர்ஹா சென்று திருமண ஒப்பந்தம் முடியும்வரையிலும் அத்தனையும் படமாக்கப்படுகின்றன.மணமகன் இல்லத்தி ருந்து துவங்கி, வீதி வீதியாகச்சென்று மணமகள் இல்லத்திற்கு அல்லதுமண்டபத்திற்குச்
அங்க அசைவுகள் அனைத்தையும் கிளிக் செய்யத்தவறுவதில்லை. அதாவது அங்கிங்கு அசைந்து,
வந்தவிருந்தாளிகளை விழுந்தடித்துக் கவனிக்கும் பெண்களை கேமராமேன் குறி தவறாது பார்த்துக்கொண்டிருக்கின்றான்.
பற்றாக்குறைக்கு அவனுக்குப்பக்க துணையாக லைட் பிடிக்க இன்னொரு எடுபிடியாள்வேறு!
ஆனால்இவையெல்லாம் ஒளிப்பதிவாகிக் கொண்டிருக்கின்றனஎன்பது தான் வேதனைக்குரிய விஷயமாகும்.
திருமணத்தில் கலந்து கொள்ளும் பெண்கள் முத ல்கேமரா மேன்களின் பார்வைகளுக்கு செழிக்க செழிக்கவிருந்தாகின்றனர்.
வர்ணனையுடன் ரசித்துப்பார்க்கும் ஆடவர்களின் பார்வைக்கு இப்பெண்கள் விருந்தாகின்றனர்.
இவ்வாறு பார்வைகளில் படரவும்தொடரவும் இந்த வீடியோப் பதிவுகள் வகைசெய்கின்றன.
அதற்கு முன்பாகவே கேமராமேன் மணப்பெண்ணை ரசித்துப் பார்த்துவிடுகின்றான்.
பவுடர் பூசி, நகைகள் அணிந்து, வண்ணஆடைகளுடன் முழு நிலவைப் போல் அமரவைக்கப்பட்டிருக்கும்
இந்த மணப்பெண்ணை நோக்கித்தான் கேமரா நிலைகுத்தி நிற்கின்றது.
அனைவர்மீதும் பாயும் கேமராவைப் போன்றே இந்தகேமராமேனின் பார்வையும் வளைத்துநிற்கின்றது.
இதில் மிகமிக வேதனைக்குரியவிஷயமும் வெட்கக்கேடான விஷயமும்என்னவென்றால்
இந்த வீடியோக்களுக்கு நம் வீட்டுப்பெண்கள் கூச்ச நாச்சமின்றி போஸ் கொடுப்பதுதான்.
என்ற (24:31)வசனத்தை அல்லாஹ் அருளிய போது, அவர்கள்தங்கள் கீழாடை(யின் ஒரு பகுதி) யைக் கிழித்துஅதைத் துப்பட்டா ஆக்கிக் கொண்டார்கள்.அறிவிப்பவர்: ஆயிஷா (ர லி), நூல்: புகாரி 4758
அதில்ஆயிஷா (ர லி) அவர்கள் அன்சாரிப் பெண்களைப்பாராட்டுவதாக இடம் பெற்றுள்ளது.
இன்று வீடியோவுக்குப்போஸ் கொடுக்கும் இந்தப் பெண்கள் எங்கே?
ஆனால் இன்றோ நடிகைகளுக்கெல்லாம்சமூக அந்தஸ்து வழங்கப்பட்டது போல்
ஒரு போலித்தோற்றம் ஏற்படுத்தப் பட்டுவிட்டது. இப்படி ஒரு போலித் தோற்றம் இருந்தாலும்
மற்ற சமுதாயமக்களிடத்தில் கூட, ஒரு பெண் பல பேர்முன்னிலையில் நேரிலோ அல்லது வீடியோவிலோகாட்சியளிப்பது
வெறுப்பிற்குரிய காரியமாகவேகருதப்படுகின்றது. இவர்களிடத்திலேயே வெட்கம் தன்வேலையைக் காட்டும் போது
ஒரு முஸ் லிமிடத்தில்இந்த வெட்க உணர்வு எப்படி இருக்க வேண்டும்?
என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர லி), நூல்: புகாரி 9
இப்படிப்பட்ட பெண்களுக்கு நபி (ஸல்)வர்கள் சுவனத்தின் வாடை கூட நுகர முடியாது என்றுஎச்சரிக்கை செய்கின்றார்கள்.
அவற்றைக் கொண்டுமக்களை அடித்துக் கொண்டிருப்பர். இன்னொருசாரார் பெண்கள் ஆவர்.
இவர்கள் ஆடை அணிந்தும்நிர்வாணமாக இருப்பார்கள். தளுக்கு நடை போட்டுஆண்களை வளைத்துப் போடுவார்கள்.
அவர்களின்தலைகள் ஒட்டகத்தின் திமில்களைப் போன்று கொண்டை போடப்பட்டு) இருக்கும்.
எவ்வளவோதொலைவுக்கு சொர்க்கத்தின் நறுமணம் வீசும். ஆனால் இவர்கள் அதன்
வாடையைக் கூட நுகரமாட்டார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர லி), நூல்: முஸ் லிம் 3971
இழந்து விடக் கூடாது. இப்படி வீடியோவில்பதிவாகி காட்சிப் பொருளாகும் பெண்கள் ஒரு தடவைமட்டும் பாவம்
செய்யவில்லை. அந்த வீடியோகேஸட்டுகள் எப்போதெல்லாம் ஆண்களால்பார்க்கப்படுகின்றதோ
அப்போதெல்லாம் பாவம்பதியப்படும் நிலையை அடைகின்றார்கள்.
ரோஷம் இழந்த ஆண்கள்
இஸ்லாம் மனிதர்களுக்கு ரோஷ உணர்வைஊட்டுகின்றது. பின்வரும் ஹதீஸில் நபி (ஸல்)அவர்கள் இதைத் தெளிவாக உணர்த்துகின்றார்கள்.
''
ஸஅத் பின் உபாதா (ர லி)அவர்கள் கூறினார்கள். இந்தச் செய்தி நபி (ஸல்)அவர்களை எட்டிய போது,
''ஸஅதின் ரோஷத்தைக்கண்டு நீங்கள் வியப்படைகின்றீர்களா?அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அவரை விடஅதிக ரோஷமுள்ளவன்.

அல்லாஹ் என்னைவிடவும் அதிக ரோஷமுள்ளவன்.
அல்லாஹ் தன்ரோஷத்தின் காரணத்தால் தான் வெளிப்படையானமற்றும் மறைவான மானக்கேடான
செயல்கள்அனைத்தையும் தடை செய்து விட்டான்.
(திருந்துவதற்கு வாய்ப்பளித்து) விட்டுப்பிடிப்பதைமிகவும் விரும்புபவர் அல்லாஹ்வை விடவேறெவரும் இல்லை.
அதனால் தான் நற்செய்திசொல்பவர்களையும் எச்சரிக்கை செய்பவர்களையும்அல்லாஹ் அனுப்பி வைத்தான்.
அல்லாஹ்வை விடமிகவும் புகழை விரும்புபவர்கள் வேறெவருமில்லை.
அதனால் தான் அல்லாஹ் சொர்க்கத்தை அளிப்பதாக வாக்களித்துள்ளான்''என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: முகீரா பின்ஷுஅபா (ர லி), நூல்: புகாரி 6846, 7416
ஆனால் இந்த விஷயத்தில் ஆண்கள் ரோஷமிழந்து நிற்கின்றார்கள். அதனால் தான் மணம் முடிக்கப் போகும்தானே சரியாகப் பார்த்திராத நிலையில் ஒரு கேமராக்காரன் பார்த்து அவளது அழகை ரசிப்பதற்கு அனுமதிக்கின்றான்.
இதுபோன்று தனது வீட்டுப்பெண்கள் அனைவரையும் காட்சிப் பொருளாக ஆக்கி,அதை அடுத்தவர்களின் பார்வைகளுக்குவிருந்தாகப்படைக்கின்றான்.
இதில் ஏகத்துவவாதி என்று கூறுவோர் கூட விதிவிலக்காக இல்லை. அவர்களது வீட்டிலும்
திருமண உரை என்றபெயரில் வீடியோ எடுக்கப்பட்டு, அதில் குடும்பப் பெண்களை எல்லாம் அரங்கேற்றும் அவலத்தை நடத்திவிடுகின்றார்கள்.
தொற்றி நிற்கும் ஒரு கொடிய தொற்றுநோயாகும். அந்நிய ஆடவர்களின் பார்வைகளில் நம்முடைய பெண்கள் விருந்தாகும் வீடியோ கலாச்சாரத்தையும் இதை அடிப்படையாகக் கொண்ட திருமணங்களையும் ஏகத்துவவாதிகள் புறக்கணிக்கவேண்டும்.
இத்தகைய கலாச்சார சீரழிவை விட்டும்நமது சமுதாயத்தைக் காக்க வேண்டும்.
போட்டோக்கள் என்பது புரையோடிப் போன ஒரு பழக்கமாக நீண்ட காலமாகநமது சமுதாயத்தில் உள்ளது.
வீடியோ கேஸட்டாவது பிளேயரில்போட்டால் தான் படம் தெரியும். ஆனால் இந்தபோட்டோக்களோ ஆல்பங்களில்
சேகரிக்கப்பட்டுஅவரவர் தங்கியிருக்கும் அறைகளிலுள்ள மேஜைகளில்பார்வைக்கு வைக்கப்படுகின்றது.
அவசியத் தேவைகளுக்காகவும், ஆதாரங்களுக்காகவும் பயன்படுத்துவதில் தவறில்லை.
ஆனால் இவையன்றி அநாவசியமாக போட்டோ எடுத்து அதைப் பாதுகாத்துவைப்பதன் மூலம் நாம் பாவமான காரியம் செய்தவர்களாகின்றோம். இத்தகைய உருவப்படங்கள் வீட்டில் இருக்கையில் மலக்குகள் வருவது கிடையாது.
அறிவிப்பவர்: அபூதல்ஹா (ர லி), நூல்: புகாரி 3322
மறுக்கின்றார்கள் என்பதை புகாரி 3226 ஹதீஸில் காண முடிகின்றது.
இந்த உருவப் படங்களை விட்டும் நாம் தவிர்ந்திருக்கவேண்டும்.
திருமண போட்டோக்களாலும் ஏற்படும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
எனவே இது போன்ற தீமைகளை விட்டும் நாம் விலகியிருப்போமாக!

Ahmed Kabeer Rifayi....Mohamed( AKR )

Sunday, January 2, 2011

கல்வி விழிப்புணர்வு மாநாடு'

இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் 2011,ஜனவரி 14-15,வெள்ளி & சனிக்கிழமைகளில் நமதூரில்'கல்வி விழிப்புணர்வு மாநாடு'நடைபெறவுள்ளதை அறிவீர்கள்.

முதல் நாள் (14.01.2011) நிகழ்ச்சியில் இளையான்குடி, டாக்டர் ஜாஹிர் ஹுஸைன் கல்லூரியின் பேராசிரியர் டாக்டர் ஆபிதீன்அவர்கள் 'உனக்குள் உன்னைத் தேடு' எனும் தலைப்பில் மாணவர்களுக்கான சிறப்புரையாற்ற உள்ளார்கள்.

"அடுத்த தலைமுறையைப் படித்த தலைமுறையாக்கிட"முழக்கத்தோடு 'சமூகநீதி அறக்கட்டளை'யும் 'சமூகநீதி முரசு' எனும் இதழும் நடத்திவருபவரும் நமது சமுதாயம் கல்வியில் உயரவேண்டும் என்பதற்காகவே பல ஊர்களிலும் சென்று பிரச்சாரம் செய்பவருமானசகோ. முஹம்மது ஸலீம் (CMN) இரண்டாம்நாள்(15.1.2011) நிகழ்ச்சியில் சிறப்புரை நிகழ்த்தவுள்ளார். மாநாட்டில் வினா-விடைப் பகுதியும் இடம்பெறவுள்ளது, இன்ஷா அல்லாஹ்.



விரிவான நிகழ்ச்சி நிரல் இங்கு விரைவில் பதிவு பெறும். நமதூரில் நடைபெறும் முதல் 'கல்வி விழிப்புணர்வு மாநாட்டுக்காக' உருவாக்கப்பட்ட இலச்சினை LOGO இங்கு அறிமுகப் படுத்தப்படுகிறது - நீங்கள் பிறருக்கு அறிமுகப் படுத்துவதற்காக!

மாநாடு சிறப்புற நடைபெறவும் அதனால் நம் மாணவர்கள் பயன்பெறவும் வேண்டுமென எல்லாரும் அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள். அவன் அருள் புரிவான்.

இவண்

அதிரை கல்வி விழிப்புணர்ச்சி மாநாட்டுக் குழு
Adirai Educational Awareness Conference - Team

நன்றி.அதிரை நிருபர்