Wednesday, March 30, 2011

+2 மாணவர்களுக்கு ஜும்ஆ தொழுகை கிடைக்குமா?

அதிராம்பட்டினம் காதீர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் +2 தேர்வுகள் நடைப்பெறும் சூழ்நிலையில் ஊர் சுற்றுவட்டார முஸ்லீம் மாணவர்களும் எழுதுகின்றனர். வெள்ளிக்கிழமைகளிலும் தேர்வு நடைப்பெறுவதால் தேர்வு பகல் 1.15 மணிக்குதான் தேர்வு எழுதி முடிக்கின்றனர். இதனால் இவர்களுக்கு ஜும்ஆ கடந்த 2 வருடமாக கிடைப்பதில்லை. காரணம் நமதூரின் ஜும்ஆ தொழுகை நேரம் (1.00-1.30 க்குள்)அப்படி இருக்கிறது. ஊர் ஜும்ஆ பள்ளிகளின் ஜமாத்தார்கள் அந்த தேர்வு நாட்களில் (குறிப்பாக மார்ச் 11 மற்றும் 18 ஆம் தேதிகளில் ) மட்டும் 1.30 மணிக்கு ஜும்ஆ தொழுகை நடைபெறுமாறு மாற்றம் செய்வார்களா? என்பது மாணவர்களின் கோரிக்கை.

No comments:

Post a Comment